Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலையில் கிருஷ்ணர் சிலைகள் ... பரமக்குடி பூமாரியம்மன் கோயில் விழா; விரதம் துவங்கிய பக்தர்கள் பரமக்குடி பூமாரியம்மன் கோயில் விழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுஅத்திக்கோம்பை காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
புதுஅத்திக்கோம்பை காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

22 ஆக
2024
03:08

ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் அருகே புதுஅத்திக்கோம்பை மஹா கணபதி, பஞ்சமுக மஹா கணபதி, பாலமுருகன், மஹாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது.


கும்பாபிஷேக விழா பூஜைகள் ஆக.19 காலை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து மஹாசங்கல்பம், புண்யாக வாசகம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், லட்சுமி ஹோமம், கோபூஜை நடந்தது. அன்று மாலை ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் இருந்து கரகாட்டம், வானவேடிக்கை, தேவராட்டம், ஒயிலாட்டம் பொய்க்கால் குதிரை ஆட்டத்துடன் புண்ணிய தீர்த்த காவடிகள் புறப்பட்டு ஊர்வலமாக புதுஅத்திக்கோம்பை மாகாளியம்மன் கோயிலுக்கு வந்து சேர்ந்தது. ஆக.20 காலை தீர்த்தம் செலுத்துதல், தீர்த்த சங்கிரஹனம், யாகசாலை அலங்காரம் நடந்தது. அன்று மாலை மங்கள இசையுடன் முளைப்பாரி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து வாஸ்து சாந்தி, பிரவேசப்பலி, கும்பாலங்காரம், முதற்கால யாக பூஜை ஆரம்பமானது. நேற்று காலை விசேஷ சந்தி, புதிய விக்ரகங்களுக்கு கண் திறப்பு, இரண்டாம் கால யாக பூஜை, சூரிய பூஜை, காயத்ரி மந்திரகோமங்கள் நடந்தது. மதியம் விசேஷ திரவியங்கள் ஹோமம், அன்று மாலை மூன்றாம் காலயாக பூஜை தொடங்கியது. இன்று காலை மங்கள இசை நான்காம் காலையாக பூஜை தொடங்கியது. கும்பங்கள் திருக்கோயிலை வலம் வந்தது. இதனைத் தொடர்ந்து மஹாகணபதி, பஞ்சமுக மஹாகணபதி, பாலமுருகன், மஹாகாளியம்மன் கோவில் விமான கோபுரங்களில் சிவாச்சாரியார்களால் புண்ணிய தீர்த்தங்கள் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. ட்ரோன் மூலம் பக்தர்களுக்கு தீர்த்தங்கள் தெளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மஹா தீபாராதனை காட்டப்பட்டு , விபூதி, தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவை முன்னிட்டு அன்னதானம் நடந்தது. புதுஅத்திக்கோம்பை மற்றும் குழந்தைவேல்கவுண்டன்புதூர் திருப்பணி குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில், 108 திவ்யதேசங்களில் 20வது தலமாகவும், 40 ... மேலும்
 
temple news
கோவை: மார்கழி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, கோவை, உக்கடம் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி கோட்டைமேடு ஐயப்பன் கோயிலில் 10ம் ஆண்டு மண்டலபூஜை விழா முன்னிட்டு ஐயப்பன் சாமி ஊர்வலம் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள அருட்கோட்டம் முருகன் கோவிலில் மகாலட்சுமி சிலையின் கண் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அருகே தென்பெண்ணையாற்றில் சோழர்கால துர்கை சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.பண்ருட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar