பரமக்குடி பூமாரியம்மன் கோயில் விழா; விரதம் துவங்கிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஆக 2024 03:08
பரமக்குடி; பரமக்குடி அருகே லெட்சுமணன் குடியிருப்பு கிராமத்தில் அருள் பாலிக்கும் பூமாரியம்மன் கோயில் 15வது ஆண்டு அக்னி சட்டி, பால்குடம் மற்றும் பொங்கல் விழா துவங்கியது. இக்கோயிலில் நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டிய நிலையில், பக்தர்களும் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். தொடர்ந்து தினமும் அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. முக்கிய விழாவாக ஆக., 26 மாலை 5:00 மணி முதல் அக்னி சட்டி, பூத்தட்டு விழா எடுக்கப்பட்டு அம்மன் பூக்களால் அலங்காரம் செய்யப்படுவார். பின்னர் ஆக., 27 காலை 5:00 மணி தொடங்கி பக்தர்கள் பால்குடம், கரகம் எடுத்து, வேல் குத்தியும் வலம் வருவர்.10:00 மணிக்கு பூமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. அன்று காலை அன்னதானம் வழங்கப்படும். ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்துள்ளனர்.