பரமக்குடி; பரமக்குடி அருகே ஊரக்குடி கிராமத்தில் அருள் பாலிக்கும் கண்ணபிரான் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. ஊரக்குடியில் பாமா, ருக்மணி சமேத கண்ணபிரான் கோயில் உள்ளது. கோயில் கும்பாபிஷேக விழா கணபதி, நவகிரக பூஜையுடன் துவங்கி இரண்டு கால யாக பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து இன்று காலை மகாபூர்ணாகுதிக்கு பின் கடம் புறப்பாடாகி, கோபுர கலசங்களை அடைந்தது. பின்னர் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு பால், பஞ்சாமிர்தம், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.