Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புத்தூர் சங்கிலிக்கருப்பர், ... கொழையூர் வரதராஜ பெருமாள் கோயிலில் மகா சம்ப்ரோக்ஷணம்; பக்தர்கள் வழிபாடு கொழையூர் வரதராஜ பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜ சுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜ சுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

23 ஆக
2024
11:08

மயிலாடுதுறை; ஆச்சாள்புரத்தில் கோலாகலமாக நடந்த சிவலோக தியாகராஜ ஸ்வாமி கோவில் கும்பாபிஷேக விழாவில் ஆதீனங்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா ஆச்சாள்புரம் கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருவென்னீற்றுமையம்மை சமேத சிவலோக தியாகராஜ சுவாமி கோவில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற  இத்தலத்தில் சமயக்குறவர்களுள் ஒருவரான திருஞானசம்பந்த பெருமான் திருமண கோலத்தில் காட்சியளித்த  ஸ்தலமாகவும், துணைவியாருடன் சிவசோதியில் கலந்து அருளிய சிறப்புமிக்க கோவிலாக திகழ்கிறது. இக்கோவில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 16ஆம் தேதி பூர்வாங்க பூஜைகளும், 20ம் தேதி முதல் காலை யாகசாலை பூஜையும் தொடங்கி நடைபெற்றது. இன்று 6ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு சிவ வாத்தியங்கள் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க  கோவிலை வலம் வந்து சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளின் விமானங்களை அடைந்தது.  அதனை அடுத்து தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமஹா சன்னிதானம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. கும்பாபிஷேகத்தில்  செங்கோல் ஆதீனம் 103 வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான சுவாமிகள், சூரியனார் கோயில்  சிவாக்கிர யோகிகள் ஆதீனம் 28வது குரு மகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள், தொண்டை மண்டல ஆதீனத்தின் 234-வது  குருமகாசந்நிதானம் நாகராஜ் சுவாமிகள், நாச்சியார் கோவில் ஆதீனம், திருப்பனந்தாள் காசிமடத்து  இளைய அதிபர் ஸ்ரீமத் சபாபதி தம்பிரான், தருமபுரம் ஆதீன கட்டளை தம்பிரான்கள், சென்னை மகாலட்சுமி உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மாலை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. போலீசார் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாததால் கும்பாபிஷேகத்திற்கு கலந்து கொண்ட பக்தர்கள் ஆபத்தை உணராமல் சாரத்தின் வழியாக கோபுரத்தின் மீது ஏறி தரிசனம் செய்தது காண்போரை பதை பதைக்க செய்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்துார் முருகன் கோயில் கந்த சஷ்டி விழா அக்., 22 ல் துவங்குகிறது. 27ல் சூரசம்ஹாரம் ... மேலும்
 
temple news
திருப்பதி;  தெனாலி சாஸ்திர பரிக்ஷையை வெற்றிகரமாக முடித்த பன்னிரண்டு புகழ்பெற்ற சாஸ்திர ... மேலும்
 
temple news
சென்னை; அருள்மிகு வடபழனி  ஆண்டவர் திருக்கோயிலில் செயல்பட்டு வரும் ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் 2025-2026 ... மேலும்
 
temple news
சிவகங்கை : திருப்புத்துார் அருகே பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் இன்று புரட்டாசி வியாழனை ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலை திருப்பதியில் தரிசனம் செய்யச் சொல்லும் மூத்த குடிமக்கள் மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar