பதிவு செய்த நாள்
25
ஆக
2024
07:08
மேட்டுப்பாளையம்; தென் திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில், பவித்ரோற்ஸவ வைபவத்தையொட்டி மலையப்ப சாமி, ஸ்ரீதேவி, பூதேவி சகிதம் திருவீதி உலா வந்தார்.
மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள தென்திருப்பதி எனப்படும் ஸ்ரீவாரி ஆலயத்தில், ஆண்டுதோறும் நடத்தப்படும் பவித்ரோற்ஸவ வைபவம், நேற்று முன் தினம் தொடங்கியது. நேற்று, மலையப்ப சாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் விஸ்வக்சேன ஆச்சார்யர்களோடு, யாகசாலையில் பிரவேசம் செய்த நிலையில், சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன. மலையப்ப சாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் மேளதாளம் முழங்க திருவீதி உலா வந்தார். அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க, சுவாமி நான்கு மாட வீதிகளின் வழியாக திருவீதி உலா வந்து, கோவிலை அடைந்தார். திரளான பக்தர்கள், ‘கோவிந்தா கோவிந்தா’ என கோஷங்களை எழுப்பி வழிபட்டனர்.