Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தென் திருப்பதியில் பவித்ரோற்ஸவம்; ...  கோவை இஸ்கான் கோவிலில்  கிருஷ்ண ஜெயந்தி உற்சாகம் கோவை இஸ்கான் கோவிலில் கிருஷ்ண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முருகா கோஷத்துடன் கோலாகலமாக துவங்கியது முத்தமிழ் முருகன் மாநாடு; இன்று இரண்டாம் நாள்
எழுத்தின் அளவு:
முருகா கோஷத்துடன் கோலாகலமாக துவங்கியது முத்தமிழ் முருகன் மாநாடு; இன்று இரண்டாம் நாள்

பதிவு செய்த நாள்

25 ஆக
2024
07:08

பழனி; திண்டுக்கல் மாவட்டம், பழனியில் ஹிந்து அறநிலையத்துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக துவக்கி வைத்தார்.

பழனியாண்டவர் கலை கல்லுாரியில் இரண்டு நாள் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நேற்று துவங்கியது. ஐந்து ஆய்வகங்கள், 1,300 ஆய்வு கட்டுரைகள், முப்பரிமாண முருகன் பாடலரங்கம், சிறப்பு புகைப்பட கண்காட்சி இடம் பெற்றுள்ளன. மாநாட்டை குன்றக்குடி அடிகளார் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். மாநாட்டு நுழைவாயிலை அமைச்சர்கள் பெரியசாமி, சக்கரபாணி, சேகர்பாபு திறந்து வைத்தனர். கண்காட்சி அரங்கம் முன் அமைக்கப்பட்டிருந்த, 100 அடி கொடிக்கம்பத்தில் முருகன் மாநாட்டுக் கொடியை ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் ஏற்றினார்.

சீர்காழி சிவசிதம்பரம் முருகன் பாடலை பாட, முருகன் பக்தி கோஷங்கள் இடையே மாநாடு துவங்கியது. முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக பங்கேற்று துவக்கவுரையாற்றினார். மாநாட்டு சிறப்பு மலரை அமைச்சர் பெரியசாமி வெளியிட, நீதிபதி சுப்ரமணியன் பெற்றுக்கொண்டார். இலங்கை கிழக்கு மாகாண கவர்னர் செந்தில் தொண்டைமான், லண்டன் துணை மேயர் பரம்நந்தா, மலேஷிய முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன், உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுப்பிரமணியன், புகழேந்தி, சிவ ஞானம், வேல்முருகன். திருவாவடுதுறை, குன்றக்குடி, பேரூர், செங்கோல், சிரவை, திருப்பா திரிப்புலியூர், தருமபுரம், மதுரை, பொம்மபுரம், திருப்பனந்தாள், சூரியனார்கோவில், வேளாக்குறிச்சி ஆதீனங்கள், எம்.பி., சச்சிதானந்தம், எம்.எல்.ஏ., செந்தில்குமார், சுற்றுலா பண்பாடு அறநிலையங்கள் துறை முதன்மை செயலர் சந்திரமோகன், அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  பங்கேற்ற ஆதீனங்கள், நீதிபதிகள், அமைச்சர்கள் உட்பட அனைவருக்கும் ஹிந்து அறநிலையத்துறை சார்பில் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; தீபாவளிக்கு ராம ஜென்மபூமி தயாராகி வருகிறது, ஸ்ரீ ராமர் மந்திரின் முதல் தளத்திலிருந்து ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர்  ரங்க கோனார் வீதியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு, புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திருப்பனந்தாள் காசி மடத்து ... மேலும்
 
temple news
சூலூர்; மழை வேண்டி அரசூர் கிராம மக்கள், மழைச்சோறு எடுத்து கோவில்களில் வழிபட்டனர்.சூலூர் அடுத்த அரசூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar