ஆவணி ஞாயிறு; நாகர்கோவில் நாகராஜா கோவிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஆக 2024 03:08
கன்னியாகுமரி; நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ஆவணி ஞாயிறு கிழமையையொட்டி சுவாமி தரிசனத்திற்காக கேரளா மற்றும் திருநெல்வேலி தூத்துக்குடி விருதுநகர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தரிசனத்திற்காக பக்தர்கள் குவிந்தனர்.
நாகர்கோவில், நாகராஜா கோவிலில் ஆவணி 2ம் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே கோவில் வாசலில் குவிந்தனர். காலை கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். நேரம் செல்ல செல்ல கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது. இதனால் கோவில் வாசலில் இருந்து முக்கிய நுழைவு வாயிலையும் தாண்டி பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பக்தர்களின் வசதிக்காக தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. கோவில் வளாகத்தில் நாகர்சிலைகளுக்கு மஞ்சள் தூவி, பால் ஊற்றி பக்தர்கள் வழிபாடு நடத்தினர். பக்தர்களின் தாகத்தை போக்கும் வகையில் நீர் மோர்பந்தலும், பசியை போக்கும் வகையில் மதியம் அன்னதானமும் வழங்கப்பட்டது.