கோவை; கணபதி வேணுகோபால சுவாமி கோவிலில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டுமூலவர் வேணுகோபால சுவாமி மற்றும் உற்சவமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் ருக்மணி சத்தியபாமா உடன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் வேணுகோபால சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.