காரைக்கால் மாதாகோவில் வீதியில் உள்ள பழமையான ஸ்ரீ பொய்யாத மூர்த்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.இப்பணிகளை இன்று தொகுதி எம்.எல்.ஏ.,நாஜிம் நேரில் சென்று திருப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலருந்து ரூ.15-இலட்சத்து 50ஆயிரம் மதிப்பீட்டில் கோவில் முன்பு வண்ணக் கற்கள் பொருத்தி இருபக்கமும் வடிகால் அமைக்கும் பணியினை நாஜிம் எம்.எல்.ஏ.,பார்வையிட்டார்.மேலும் அனைத்து பணிகளும் முடிந்தவுடன் கோவில் முன்பு இருக்கக்கூடிய சாலையில் இருபுறமும் அலங்கார விளக்குகள் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைத்து தரப்படும் உறுதியளித்தார். மேலும் பணிகளை விரைவில் முடிக்கும்படியும் மற்றும் தரமாக செய்யும்படியும் அதிகாரிகளிடம் தெரிவித்தார். உடன் நகராட்சி உதவி பொறியாளர் லோகநாதன்,இளநிலை பொறியாளர் சத்யபாலன் மற்றும் கண்ணன் உள்ளிட்ட திருப்பணி கமிட்டி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.