சனி மகா பிரதோஷம்: தஞ்சாவூர் பெரியகோவிலில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஆக 2024 05:08
தஞ்சாவூர், உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில், பிரதோஷ வழிபாட்டிற்கு ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில், ஆவணி மாத சனி மகா பிரதோஷம் அன்று சிவ பெருமானை வழிபடுவதுடன், வாராஹி அம்மனையும் வழிபடுவது சிறப்பானது என்பது ஐதீகம். இன்று(31ம்தேதி) பெரியகோவிலில் பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் நந்தியம் பெருமானுக்கு பால், மஞ்சள், திரவியப்பொடி, தயிர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.