விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஆக 2024 05:08
விருத்தாசலம்; விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நுாற்றுக்கால் மண்டபத்தில் உள்ள நந்தி பகவானுக்கு இன்று காலை 10:30 மணிக்கு மேல், 12 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர், அருகம்புல், வில்வம், அரளி மாலைகள் சாற்றி நந்தி பகவானுக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. மாலை 4:00 மணிக்கு மேல் சந்தனக்காப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். இதேபோல், கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள ஏகநாயகர், தே.கோபுராபுரம் ஆதிசக்தீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் நெய் விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.