விக்கிரவாண்டி திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஆக 2024 05:08
விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. கோவில் கும்பாபிஷேகம் நடந்ததை முன்னிட்டு நடந்த திருக்கல்யாண உற்சவத்தில், அர்ஜூனன் – திரவுபதி அம்மன் கல்யாண அலங்காரத்தில் கிருஷ்ணன் முன்னிலையில் திருமணம் நடந்தது. திருக்கல்யாண உற்சவத்தை முன்னுார் சரவணன் குருக்கள் செய்திருந்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சுவாமி வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை வி.சாலை கிராம மக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.