பதிவு செய்த நாள்
01
செப்
2024
04:09
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் ராஜ கணபதி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் ஹவுசிங் யூனிட்டில் ராஜகணபதி கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து, 12 ஆண்டுகள் ஆனதை அடுத்து, கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து, 28ம் தேதி கும்பாபிஷேக விழா துவங்கியது. மூன்று கால யாக பூஜைகள் நடந்தன. அதைத் தொடர்ந்து, 30ம் தேதி காலை, 5:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை நடந்தது. அதைத் தொடர்ந்து காலை, 8:30 மணிக்கு, யாக சாலையிலிருந்து தீர்த்த கலசங்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். கோவிலில் உள்ள அனைத்து கோபுர கலசங்களிலும் புனித நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் செய்தனர். 9:00 மணிக்கு பெரிய நாயகி, கைலாசநாதர், ராஜகணபதி ஆகிய மூலவர் சுவாமி சிலைகள் மீது, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். யாக வேள்வி பூஜைகளை பாஸ்கர் சிவாச்சாரியார் மற்றும் குழுவினர் செய்திருந்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டி தலைவர் சுப்பையன், செயலாளர் செல்வகிருஷ்ணன், பொருளாளர் சித்தரேஸ் மற்றும் நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.