Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கஞ்சமலை சித்தேஸ்வர ஸ்வாமி கோயில் ... திருச்செந்துார் ஆவணி திருவிழாவில் தேரோட்டம் கோலாகலம்; விண்ணை பிளந்த அரோகரா கோஷம் திருச்செந்துார் ஆவணி திருவிழாவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கன்னியாகுமரி பகவதி அம்மன் தீர்த்த கிணறு திறப்பு
எழுத்தின் அளவு:
கன்னியாகுமரி பகவதி அம்மன் தீர்த்த கிணறு திறப்பு

பதிவு செய்த நாள்

01 செப்
2024
11:09

நாகர்கோவில்; கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் தீர்த்த கிணறு 100 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்ட நிலையில் அதிலிருந்து அதிக காணிக்கை, தங்கம், வெள்ளி போன்றவை கிடைக்கும் என நினைத்த அறநிலையத் துறையினர் ஏமாற்றம் அடைந்தனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பழமை வாய்ந்தது. இக்கோயிலின் உட்பிரகாரத்தில் வடக்கு பக்கம் புனித தீர்த்த கிணறு உள்ளது. இந்த தீர்த்த கிணறு கடற்கரை அருகே அமைந்த பின்னரும் உப்பு சுவையின்றி நல்ல குடிதண்ணீராக அமைந்திருப்பது தனி சிறப்பாகும்.

இந்த தீர்த்த கிணற்றில் இருந்து தினமும் பகவதி அம்மனுக்கு அபிஷேகத்திற்கான புனித நீரை எடுத்து அபிஷேகம் செய்வது வழக்கம். கோயில் மூலஸ்தானம் முன்புள்ள வாடாவிளக்கு மண்டப சுரங்கப்பாதை வழியாக கோயில் மேல் சாந்திகள் இந்த தீர்த்த கிணற்றுக்குள் சென்று புனித நீர் எடுத்து சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்து வருகின்றனர். இதை சுத்தமாக பாதுகாக்கும் வகையில் கிணற்றின் மேல் பகுதியில் இரும்பு கம்பிவலைகளால் மூடப்பட்டுள்ளது. இந்த தீர்த்த கிணற்றில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் நாணயங்களை கணிக்கையாக போட்டு வருகின்றனர். இது தீர்த்த கிணற்றின் மேலே உள்ள கருங்கற்களால் கிடந்தது. இதைத் திறந்து நாணயங்களை எடுக்க முடிவு செய்த தேவசம்போர்டு அதிகாரிகள் பக்தர்கள் போட்ட தங்கம், வெள்ளி போன்றவை கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றம் அடைந்தனர். சொற்ப அளவிலான நாணயங்களே கிடைத்தது. தீர்த்தகிணற்றில் பக்தர்கள் காணிக்கை பணம் செலுத்துவதற்கு முறையான நடைமுறைகள் எதுவும் இல்லை. இதை மீறி பக்தர்கள் நாணயங்களை போடுகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாட வீதியில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவிலில்,  புரட்டாசி மத்யாஷ்டமியை ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டியில் சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் ; புரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமியில் அனைத்து பைரவர் சன்னதிகளில் சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; கோவை ஈஷா யோகா மையத்தில், ஆதியோகி திவ்ய தரிசன நிகழ்வு, பராமரிப்பு பணிகளுக்காக, 5 ... மேலும்
 
temple news
சென்னை; ‘‘கோவில்களால் கலைகள் வளர்க்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு உள்ளன,’’ என, செம்மொழி தமிழாய்வு மத்திய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar