நாகர்கோவில்; கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் தீர்த்த கிணறு 100 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்ட நிலையில் அதிலிருந்து அதிக காணிக்கை, தங்கம், வெள்ளி போன்றவை கிடைக்கும் என நினைத்த அறநிலையத் துறையினர் ஏமாற்றம் அடைந்தனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பழமை வாய்ந்தது. இக்கோயிலின் உட்பிரகாரத்தில் வடக்கு பக்கம் புனித தீர்த்த கிணறு உள்ளது. இந்த தீர்த்த கிணறு கடற்கரை அருகே அமைந்த பின்னரும் உப்பு சுவையின்றி நல்ல குடிதண்ணீராக அமைந்திருப்பது தனி சிறப்பாகும்.
இந்த தீர்த்த கிணற்றில் இருந்து தினமும் பகவதி அம்மனுக்கு அபிஷேகத்திற்கான புனித நீரை எடுத்து அபிஷேகம் செய்வது வழக்கம். கோயில் மூலஸ்தானம் முன்புள்ள வாடாவிளக்கு மண்டப சுரங்கப்பாதை வழியாக கோயில் மேல் சாந்திகள் இந்த தீர்த்த கிணற்றுக்குள் சென்று புனித நீர் எடுத்து சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்து வருகின்றனர். இதை சுத்தமாக பாதுகாக்கும் வகையில் கிணற்றின் மேல் பகுதியில் இரும்பு கம்பிவலைகளால் மூடப்பட்டுள்ளது. இந்த தீர்த்த கிணற்றில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் நாணயங்களை கணிக்கையாக போட்டு வருகின்றனர். இது தீர்த்த கிணற்றின் மேலே உள்ள கருங்கற்களால் கிடந்தது. இதைத் திறந்து நாணயங்களை எடுக்க முடிவு செய்த தேவசம்போர்டு அதிகாரிகள் பக்தர்கள் போட்ட தங்கம், வெள்ளி போன்றவை கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றம் அடைந்தனர். சொற்ப அளவிலான நாணயங்களே கிடைத்தது. தீர்த்தகிணற்றில் பக்தர்கள் காணிக்கை பணம் செலுத்துவதற்கு முறையான நடைமுறைகள் எதுவும் இல்லை. இதை மீறி பக்தர்கள் நாணயங்களை போடுகின்றனர்.