Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கஞ்சமலை சித்தேஸ்வர ஸ்வாமி கோயில் ... திருச்செந்துார் ஆவணி திருவிழாவில் தேரோட்டம் கோலாகலம்; விண்ணை பிளந்த அரோகரா கோஷம் திருச்செந்துார் ஆவணி திருவிழாவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கன்னியாகுமரி பகவதி அம்மன் தீர்த்த கிணறு திறப்பு
எழுத்தின் அளவு:
கன்னியாகுமரி பகவதி அம்மன் தீர்த்த கிணறு திறப்பு

பதிவு செய்த நாள்

01 செப்
2024
11:09

நாகர்கோவில்; கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் தீர்த்த கிணறு 100 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்ட நிலையில் அதிலிருந்து அதிக காணிக்கை, தங்கம், வெள்ளி போன்றவை கிடைக்கும் என நினைத்த அறநிலையத் துறையினர் ஏமாற்றம் அடைந்தனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பழமை வாய்ந்தது. இக்கோயிலின் உட்பிரகாரத்தில் வடக்கு பக்கம் புனித தீர்த்த கிணறு உள்ளது. இந்த தீர்த்த கிணறு கடற்கரை அருகே அமைந்த பின்னரும் உப்பு சுவையின்றி நல்ல குடிதண்ணீராக அமைந்திருப்பது தனி சிறப்பாகும்.

இந்த தீர்த்த கிணற்றில் இருந்து தினமும் பகவதி அம்மனுக்கு அபிஷேகத்திற்கான புனித நீரை எடுத்து அபிஷேகம் செய்வது வழக்கம். கோயில் மூலஸ்தானம் முன்புள்ள வாடாவிளக்கு மண்டப சுரங்கப்பாதை வழியாக கோயில் மேல் சாந்திகள் இந்த தீர்த்த கிணற்றுக்குள் சென்று புனித நீர் எடுத்து சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்து வருகின்றனர். இதை சுத்தமாக பாதுகாக்கும் வகையில் கிணற்றின் மேல் பகுதியில் இரும்பு கம்பிவலைகளால் மூடப்பட்டுள்ளது. இந்த தீர்த்த கிணற்றில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் நாணயங்களை கணிக்கையாக போட்டு வருகின்றனர். இது தீர்த்த கிணற்றின் மேலே உள்ள கருங்கற்களால் கிடந்தது. இதைத் திறந்து நாணயங்களை எடுக்க முடிவு செய்த தேவசம்போர்டு அதிகாரிகள் பக்தர்கள் போட்ட தங்கம், வெள்ளி போன்றவை கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றம் அடைந்தனர். சொற்ப அளவிலான நாணயங்களே கிடைத்தது. தீர்த்தகிணற்றில் பக்தர்கள் காணிக்கை பணம் செலுத்துவதற்கு முறையான நடைமுறைகள் எதுவும் இல்லை. இதை மீறி பக்தர்கள் நாணயங்களை போடுகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ( ஜூலை 14) அதிகாலை மகா ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று  அதிகாலை மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க, மதுரையில் இருந்து நேற்று இரவு சொக்கநாதருடன் ... மேலும்
 
temple news
சுப்ரமணிய சுவாமியின் கருவறை 773 இல் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில், அவரது படைத்தலைவன் சாத்தன் கணபதி ... மேலும்
 
temple news
கடலுார்; பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் இன்று (14ம் தேதி) காலை 7:00 மணிக்கு பிரம்மோற்சவ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar