சங்கராபுரம் முத்து மாரியம்மன் கோவில் தேர் திருவிழா; பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02செப் 2024 05:09
சங்கராபுரம்; பாவளம் கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது. விழாவையொட்டி, கடந்த மாதம் 15ம் தேதி கொடியேற்றம் நடந்தது. இன்று காலை அம்மனுக்கு சிறப்ப அபிஷேக ஆராதனை நடந்தது. பின் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளச் செய்து, பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.