அன்னூர்; அன்னூர் வட்டாரத்தில், அம்மன் கோவில்களில், இன்று சிறப்பு வழிபாடு நடந்தது. ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு, இன்று அன்னூர் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு, பால், தயிர், நெய், உள்ளிட்ட 16 திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அலங்கார பூஜை நடந்தது. சிறப்பு அங்காரத்தில், அம்மன் அருள் பாலித்தார். அதே வளாகத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. பழமையான மன்னீவரர் கோவிலில் அருந்தவ செல்வி அம்மன் சன்னதியில், அம்மனுக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. அன்னூர் ஓதிமலை சாலையில் உள்ள பெரிய அம்மன் கோவில், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சின்னம்மன் கோவில், பிள்ளையப்பம்பாளையம் செல்வநாயகி அம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.