கணியூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23செப் 2024 12:09
கருமத்தம்பட்டி; கணியூர் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. கணியூர் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவில் பழமையானது. இங்கு, புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை ஒட்டி, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. முன்னதாக, சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேக, அலங்காரம் மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். இதேபோல், கரவழி மாதப்பூரில் உள்ள ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை ஒட்டி, அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி பக்தர்களுக்கே அருள்பாலித்தார். தொடர்ந்து அச்சம்பாளையம் சண்முகம் குழுவினரின் சிறப்பு நாம சங்கீர்த்தனம் நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அஞ்சனை மைந்தனை வழிபட்டனர்.