காரியாபட்டி; காரியாபட்டி சூரனுார் சிவன் கோயிலில், சாயல்குடி சிவனடியார்கள் சார்பாக குருக்கள் ரவிச்சந்திரன் தலைமையில், 50 பேர் கொண்ட குழு உழவாரப் பணியில் ஈடுபட்டனர். கோயில் வளாகத்தை சுற்றி புதர்மண்டி கிடந்ததை அப்புறப்படுத்தினர். மரக்கன்றுகளை பழுது பார்த்தனர். தற்போது கோயில் வளாகம் பார்ப்பதற்கு அழகாக காட்சி அளிக்கின்றன. கோயில் அர்ச்சகர் தெய்வசிகாமணி நன்றி கூறினார். கைலாசநாதர் ஆனந்தவள்ளி, பைரவர், முருகன், விநாயகர், பெருமாள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்யப்பட்டது. இன்பம் பவுண்டேஷன் நிறுவனர் விஜயகுமார் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. ஜனசக்தி பவுண்டேஷன் நிறுவனர் சிவக்குமார், நிர்வாகி சரவணன், உழவாரப் பணி நிர்வாகிகள் முருகன், மாரிமுத்து, மூர்த்தி, ஜீவா கலந்து கொண்டனர்.