மயூரநாதர் பாம்பன் சுவாமிகள் கோயிலில் தேய்பிறை சஷ்டி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23செப் 2024 01:09
மானாமதுரை; மானாமதுரை அலங்காரகுளம் அருகே அமைந்துள்ள மயூரநாதர் பாம்பன் சுவாமி கோயிலில் மாதந்தோறும் தேய்பிறை சஷ்டி பூஜை நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இன்று தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு சுவாமிகளுக்கு அதிகாலை பால், சந்தனம், பன்னீர், இளநீர், தயிர், திரவியம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டு அபிஷேக, ஆராதனைகள், தீபாராதனைகள் செய்யப்பட்டு சுவாமிகளுக்கு அலங்காரம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பூஜைகளில் மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.அன்னதானம் நடைபெற்றது.பூஜைகளுக்கான ஏற்பாடுகளை பாம்பன் சுவாமி அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.