கருப்பணசாமி கோயிலில் வராகி அம்மனுக்கு பஞ்சமி சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23செப் 2024 03:09
பரமக்குடி; பரமக்குடி புதுநகர் பதினெட்டாம்படி கருப்பணசாமி கோயில் வராகி அம்மனுக்கு பஞ்சமி திதி அன்று அபிஷேகம் நடந்தது. இக்கோயிலில் நேற்று மாலை அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகம் நடந்தது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பிரசாதங்கள் வழங்கப்பட்டன.