Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ‘இறைவன் திருவடியை பற்றிக்கொள்ள ... நவராத்திரி விழாவிற்காக கொலு பொம்மைகள் விற்பனை செய்யும் பணி தீவிரம் நவராத்திரி விழாவிற்காக கொலு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புனிதத்தன்மையை மீட்டெடுக்க மகா சாந்தி யாகம்
எழுத்தின் அளவு:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புனிதத்தன்மையை மீட்டெடுக்க மகா சாந்தி யாகம்

பதிவு செய்த நாள்

24 செப்
2024
11:09

திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டிருந்ததாக வெளியான தகவலை அடுத்து, கோவிலின் புனிதத்தன்மையை மீட்டெடுக்க, மகா சாந்தி யாகம் நேற்று நடத்தப்பட்டது. ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் தலைவருமான முதல்வர் சந்திரபாபு நாயுடு, கட்சி நிர்வாகிகளிடம் சமீபத்தில் பேசுகையில், ‘ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில், திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டிருந்தது’ என, குற்றஞ்சாட்டினார்.


சிறப்பு விசாரணை குழு: இது குறித்து விசாரிக்கும்படி சிறப்பு விசாரணை குழுவுக்கு அவர் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இந்நிலையில், ஏழுமலையான் கோவிலின் புனிதத்தன்மையை மீட்டெடுக்கும் நோக்கில், தேவஸ்தானம் சார்பில் கோவிலில் மகா சாந்தி யாகம் நேற்று நடத்தப்பட்டது. காலை 6:00 மணிக்கு துவங்கிய யாகம் 10:00 மணிக்கு முடிவடைந்தது. தொடர்ந்து ஏழுமலையான் கோவில், பிரசாத தயாரிப்பு கூடங்கள், லட்டு விற்பனை கவுன்டர், நடைபாதைகள் உள்ளிட்ட இடங்களில், கோமிய தாரனம், குங்கிலிய புகை தாரனம் ஆகியவை மேற்கொள்ளப்பட்டன. ‘இது குறித்து தேவஸ்தானம் போர்டு வெளியிட்ட அறிக்கையில், ‘லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய் கலந்து தவறு நடந்து விட்டது. ‘இதற்காக சமையல் அறையை புனிதப்படுத்தும் விதமாகவும், தவறை சரிசெய்யும் விதமாகவும், கோவில் புனிதத்தன்மையை பராமரிக்கும் விதமாகவும் மகா சாந்தி யாகம் நடத்தப்பட்டது.


கடும் நடவடிக்கை: ‘இதற்காக லட்டு தயாரிக்கும் அறையில் புனித பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. ‘பஞ்சகாவ்யா’ வாயிலாக ஒட்டுமொத்த கோவில் வளாகமும் புனிதப்படுத்தப்பட்டது. ‘இதில், எட்டு புரோகிதர்கள், மூன்று ஆகம ஆலோசகர்கள், திருப்பதி தேவஸ்தானம் செயல் அலுவலர் ஷியாமளா ராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்’ என, குறிப்பிடப்பட்டுள்ளது. செயல் அலுவலர் ஷியாமளா ராவ் கூறுகையில், “வாஸ்து சுத்தி, கும்பஜல சம்ப்ரோக் ஷணம் நடந்தது. இனிமேல், லட்டு பிரசாதம் மற்றும் நைவேத்தியங்களில் தோஷம் இல்லை. பக்தர்கள் தங்கள் சந்தேகங்களை விட்டுவிடலாம்,” என்றார். இதற்கிடையே, பா.ஜ., மூத்த தலைவரான சுப்பிரமணியன் சாமி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘லட்டு கலப்பட விவகாரம் குறித்து நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ என, தெரிவித்துள்ளார். லட்டு பிரசாதத்திற்கு நெய் சப்ளை செய்த ஏ.ஆர்., டெயிரி நிறுவனத்திற்கு, மத்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பா.ஜ., மூத்த தலைவரான சுப்பிரமணியன் சாமி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘லட்டு கலப்பட விவகாரம் குறித்து நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ என, தெரிவித்துள்ளார்.


சுப்பிரமணியன் சாமி மனு; முன்னாள் அறங்காவலர் சத்தியம்; திருப்பதி கோவிலுக்கு நேற்று வந்த தேவஸ்தானத்தின் முன்னாள் அறங்காவலர் பூமனா கருணாகர் ரெட்டி, அங்குள்ள குளத்தில் புனித நீராடினர். பின், அவர் கோவில் முன் நின்று கூறுகையில், “லட்டு சர்ச்சை தொடர்பாக, கடந்த சில நாட்களாக வரும் செய்திகள் என் மனதை மிகவும் காயப்படுத்தி உள்ளன. ஏழுமலையானே... நான் ஏதாவது தவறு செய்திருந்தால், என்னையும், என் குடும்பத்தினரையும் தண்டித்து விடு. கோவிந்தா... கோவிந்தா,” என, சத்தியம் செய்தார். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா நாளை காலை ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் வராஹி அம்மனுக்கு நிகும்பலா யாகம் நடந்தது. ... மேலும்
 
temple news
திருச்சி; ஆடி இருபத்தெட்டாம் பெருக்கை முன்னிட்டு தங்க பல்லக்கில் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் ஏகாதசி உற்சவத்தை ஒட்டி நடக்கும் செம்பை சங்கீத உற்சவம் பொன்விழா ... மேலும்
 
temple news
கோவை, சாய்பாபா காலனி, சின்னம்மாள் வீதியில் அமைந்துள்ள ஞான ஈஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள வாராகி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar