விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் திருநாளைப்போவார் குருபூஜை வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24செப் 2024 11:09
திருப்பூர்; நந்தனார் என்று அழைக்கப்படும் திருநாளைப்போவார் நாயனார் குருபூஜை நேற்று நடந்தது. தில்லையில் உள்ள சிவனை வழிபட சென்ற நந்தனார், அக்னியில் இறங்கி, பிறகு இறைவனை வழிபட்டு, திருவடியை அடைந்ததாக புராணங்கள் கூறுகின்றன. திருநாளைப்போவார் நாயனார், 63 நாயன்மார்களில் ஒருவராக விளங்குகிறார். புரட்டாசி ரோகிணி நட்சத்திர நாளான நேற்று, திருநாளைப்போவார் குருபூஜை நேற்று நடந்தது. திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், அர்த்தசாம பூஜை அடியார் திருக்கூட்டம் சார்பில், நேற்று குருபூஜை நடந்தது. திருவாசகம், திருத்தொண்டத்தொகை பாராயணம் செய்து, சிவனடியார் வழிபட்டனர்.