சென்னையில் திருப்பதி திருவேங்கடமுடையான் திருக்கல்யாண மஹோத்ஸவம்; வரும் 5ல் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24செப் 2024 02:09
சென்னை; கீழ்ப்பாக்கம், புல்லாபுரம் நுழைவு வாயில், பிரசன்ன வெங்கடேஸ்வரலு தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீ பத்மாவதி சமேத ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீநிவாச திருக்கல்யாண மஹோத்ஸவம் வரும் அக்., 5ம் தேதி நடைபெற உள்ளது.
சென்னை, கீழ்ப்பாக்கம், ஸ்ரீ பிரசன்ன வெங்கடேஸ்வரலு தேவஸ்தானத்தில் திருவேங்கடமுடையான் கிருபையுடன் வரும் புரட்டாசி மாதம் 19-ம் தேதி ஆங்கிலம் (05.10.2024) சனிக்கிழமை சுக்லபக்ஷம் திருதியை திதி ஸ்வாதி நக்ஷத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 8.45 மணிக்குமேல் 1.00 மணிக்குள் ஆகாசமஹாராஜாவர்மனின் புத்திரியும் ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஸ்வரூபினியுமாகிய சௌபாக்கியவதி வகுளமாலிகா தேவியின் புத்திரனும் ஸர்வலோக சரண்யன் பரமாத்மாவாகிய ஸ்ரீ பத்மாவதி தாயாருக்கும் ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமானுக்கும் ஸ்ரீ ஸ்ரீநிவாச திருக்கல்யாண மஹோத்ஸவம் சிறப்பாக நடைபெற உள்ளது. காஞ்சி ஸ்ரீஸ்ரீ பரமாச்சாரியார் அனுக்ரஹத்துடன் காஞ்சி ஸ்ரீ மடம் ஆஸ்தான வித்வான் "திருப்பாதிரிப்புலியூர் பாகவத ரத்னம் பிரம்மஸ்ரீ கோபால் சுந்தர் பாகவதர்" தலைமையில் கீதாம்ருதம் குழுவினரால் நடைபெற உள்ள இந்த விழாவில் பக்தர்கள் பங்கேற்கலாம். விழா ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர்ஜெயகோபால் சர்மா மற்றும் ஊர் பெரியோர்கள், பொதுமக்கள் மற்றும் மகளிர் பக்தர்கள் குழுவினர் செய்துள்ளனர்.