களக்காடு; களக்காடு ஐயப்பன் கோயிலில் படி பூஜை நடந்தது. களக்காடு ஐயப்பன் கோயிலில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு 5 நாட்கள் நடை திறக்கப்பட்டது. ஐயப்பனுக்கு தினசரி சிறப்பு வழிபாடுகள், திருவாசக முற்றோதுதல் நடந்தது. 5ம் நாள் இரவு சிறப்பு நிகழ்ச்சியாக 18 படி பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.