Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகாளய அமாவாசை: முன்னோரிடம் நல்லாசி ... மகாளய அமாவாசையில் செய்ய வேண்டிய தானங்கள்! மகாளய அமாவாசையில் செய்ய வேண்டிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரூ.8 கோடி மதிப்பு சோமாஸ்கந்தர் சிலை அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
ரூ.8 கோடி மதிப்பு சோமாஸ்கந்தர் சிலை அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

02 அக்
2024
10:10

சென்னை: காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 8 கோடி ரூபாய் மதிப்புள்ள சோமாஸ்கந்தர் உலோகச்சிலை, அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

மாநில சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார், ஐ.ஜி., தினகரன் தலைமையில், வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகள் மற்றும் பழங்கால கலை பொருட்கள் குறித்து துப்பு துலக்கி வருகின்றனர். அதற்காக, தமிழக சிலைகளின் படங்கள் குறித்து, இணையதளங்களை ஆய்வு செய்த போது, காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான சோமாஸ்கந்தர் உலோகச்சிலை, அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டு இருப்பதை இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி கண்டறிந்தார். இச்சிலையின் பீடத்தில், நான்கு வரியில் தெலுங்கு மொழியில் எழுதப்பட்டு இருப்பது பற்றி, கல்வெட்டு வல்லுனர்கள் உதவியுடன் ஆய்வு செய்த போது, ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு இச்சிலையை, தொண்டை மண்டலத்தை சேர்ந்த வெங்கட்ராமநாயனி பரிசாக வழங்கி இருப்பதை உறுதி செய்தனர். தற்போது, சோமாஸ்கந்தர் சிலை, அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ ஆசியன் ஆர்ட் ஆப் மியூசியத்தில் உள்ளது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு, 8 கோடி ரூபாய். இச்சிலை கடத்தல் தொடர்பாக, மாநில சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். விசாரணை அதிகாரியாக கூடுதல் எஸ்.பி., பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட சிலை விரைந்து மீட்கப்படும். மற்ற சிலைகள் குறித்தும் விசாரணை நடப்பதாக, மாநில சிலை திருட்டு தடுப்பு பிரிவு எஸ்.பி., சிவகுமார் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் தேரோட்டம் துவங்கியது. தேரில் மீனாட்சி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அய்யன்குளம் அருகே உள்ள அருணகிரிநாதர் கோவிலில், இந்திய ராணுவம் பலம் சேர்க்கும் வகையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானுார் சௌந்தர்யநாயகி சமேத கரும்பேஸ்வரர் கோவிலில் துவங்கி, ... மேலும்
 
temple news
அழகர்கோவில்; மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மே 12ல் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் அரசு, வேம்பு மரங்களுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இங்குள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar