சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் நவராத்திரி உற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03அக் 2024 01:10
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே, சுருட்டப்பள்ளி கிராமத்தில் சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில் உள்ளது. சிவாலங்களில் சிவபெருமான் லிங்க ரூபத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிலையில், இக்கோவிலில் உருவ ரூபத்தில் காட்சியளிப்பது தனிச்சிறப்பு. பிரதோஷ விழா கொண்டாட மூல காரணமாக இக்கோவிலில் நடைபெறும் விழாக்களில், புரட்டாசி மாதம் நடைபெறும் ஸ்ரீதேவி நவராத்திரி விழா பிரசித்தி பெற்றது. இவ்விழா இன்று, 3ம் தேதி துவங்கியது. தினமும் மாலை 5:00 மணிக்கு மரகதாம்பிகை தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், உற்சவ மூர்த்தி மலர் அலங்காரத்தில் ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இரவு 7:00 மணிக்கு லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் மகா தீபாராதனை நடைபெறும். இன்று முதல் 10 நாட்களுக்கு உற்சவர் வெவ்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.