சதுரகிரியில் நவராத்திரி திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03அக் 2024 03:10
ஸ்ரீவில்லிபுத்தூர்; விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழா இன்று காலை காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
இங்குள்ள ஆனந்தவல்லி அம்மனுக்கு ஆண்டுதோறும் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று முதல் நவராத்திரி திருவிழா துவங்கியது. இன்று அதிகாலை 5:00 மணிக்கு சுந்தர மகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. பின் நவராத்திரி திருவிழா காப்பு கட்டதலுடன் நடந்தது. விரதம் இருக்கும் பக்தர்கள் கையில் காப்புகளை கட்டிக் கொண்டனர். இதன்பின் ஆனந்தவல்லி அம்மன், கோயிலுக்கு எழுந்தருளி கொலுமண்டபத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம், ஏழூர் சாலியர் சமுதாயத்தினர் செய்திருந்தனர். இதனையடுத்து தினமும் இரவு 7:00 மணிக்குமேல் அம்மனுக்கு அலங்காரம், கொலு பஜனை வழிபாடு நடக்கிறது. அக்டோபர் 12ல் அம்பு போடும் நிகழ்ச்சி நடக்கிறது.