நவராத்திரி விழா; அன்னப்பட்சி அலங்காரத்தில் கோவை சாரதாம்பாள் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03அக் 2024 04:10
கோவை; கோவை ரேஸ்கோர் சிலுள்ள சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு அம்பாள் அன்னப்பட்சி அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
கோவை ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு நவராத்திரி முதல் நாளான இன்று கோவிலில் உள்ள பால விநாயகர், பாலசுப்ரமணியர், ஆதி சங்கரர், சாரதாம்பாள் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவை முன்னிட்டு சாரதாம்பாளுக்கு அன்னப்பட்சி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடை பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.