Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் ... திருமலை திருப்பதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம் திருமலை திருப்பதி பிரம்மோற்சவம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தசரா விழா கோலாகல துவக்கம்; விழாக்கோலம் பூண்டது மைசூரு
எழுத்தின் அளவு:
தசரா விழா கோலாகல துவக்கம்; விழாக்கோலம் பூண்டது மைசூரு

பதிவு செய்த நாள்

04 அக்
2024
10:10

மைசூரு; உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா நேற்று கோலாகலமாக துவங்கியது.

கர்நாடக மாநிலம், மைசூரு தசரா விழா நேற்று துவங்கியது. மூத்த கன்னட இலக்கியவாதி நாகராஜய்யா, 88, சாமுண்டீஸ்வரி தேவிக்கு மலர் துாவி, 414வது ஆண்டு தசரா விழாவை துவக்கி வைத்தார். பின், அவர் பேசுகையில், ‘‘கன்னட மண், மொழி, நீருக்காக போராடுபவர்களை கொலையாளிகளாக பார்க்காமல், அன்புடன் பார்க்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கவிழ்க்கும் யோசனைகள் யாருக்கும் வரக்கூடாது. ஆட்சியை கவிழ்ப்பது சுலபம்; ஆனால், அமைப்பது கடினம்,’’ என்றார். முதல்வர் சித்தராமையா பேசுகையில், ‘‘எவ்வளவு இடையூறுகள் ஏற்பட்டாலும், சாமுண்டீஸ்வரியின் தயவால், ஐந்து ஆண்டு ஆட்சியை பூர்த்தி செய்வோம்,’’ என்றார். துணை முதல்வர் சிவகுமார் உட்பட பலர் பங்கேற்றனர். தசரா விழாவை ஒட்டி, மைசூரு நகர் முழுதும் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளதால், நகரமே மின்னொளியில் ஜொலிக்கிறது. மலர் கண்காட்சி, பொருட்காட்சி, புத்தக திருவிழா, உணவு திருவிழா, மல்யுத்தம், விளையாட்டு போட்டிகள், திரைப்பட திருவிழா, கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள் நேற்று துவங்கியதால், மக்கள் குவிந்துள்ளனர். மன்னர் ஆட்சி காலத்தில் நவராத்திரியின் ஒன்பது நாட்களும், அரண்மனையின் தர்பார் மண்டபத்தில், மன்னர்கள் தர்பார் நடத்தி வந்தனர். புலவர்களை பாட வைத்து, பொறிகிழி, பரிசுகள் வழங்கினர். தற்போது மக்களாட்சி வந்த பின்னரும், அந்த பாரம்பரியம் தொடர்ந்து பின்பற்றப்படுகிறது. இதன்படி, தற்போதைய மன்னர் வம்சத்தின் யதுவீர், நேற்று தர்பார் நடத்தினார். வைரம், தங்கம், மாணிக்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களால், அலங்கரிக்கப்பட்டிருந்த 450 கிலோ எடையிலான ஜோடிக்கப்பட்ட சிம்மாசனத்தில் அமர்ந்து தர்பார் நடத்தி, மக்களிடம் குறைகள் கேட்டறிந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவையொட்டி இன்று நவதானிய அலங்காரத்தில் வராஹி ... மேலும்
 
temple news
தூத்துக்குடி ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கையொட்டி இன்று மாலை தொடங்கும் ... மேலும்
 
temple news
விருத்தாசலம் ; சஷ்டியை ஒட்டி விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் முருகப்பெருமான் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆனி தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 36 யானைகளுக்கு ஒரு மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar