திருப்பதி ஏழுமலையான் கோவில் தங்க கொடிமரம் சேதம்..!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04அக் 2024 02:10
திருப்பதி; திருமலை திருப்பதியில் ஆண்டு முழுவதும் 450 விழாக்கள் நடக்கின்றன அவற்றுள் சிகரம் வைத்தது போல நடப்பது பிரம்மோற்சவ விழாவாகும். இறைவனே நடத்துவதாக கருதப்படும் இந்த விழாவைக்காண பக்தர்கள் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வருவர். இந்த வருடம் இன்று (அக்.,4ல்) துவங்கி 12ம் தேதி வரை பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான கொடியேற்றம் இன்று மாலை 5:45 மணிக்கு நடைபெற உள்ளது. இந்நிலையில் ஏழுமலையான் கோவிலில் உள்ள தங்க கொடி மரத்தின் வளையம் திடீரென உடைந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பிரம்மோற்சவ கொடியேற்ற நிகழ்ச்சிக்கு கயிறை பொருத்தும் பணியின் போது வளையம் உடைந்து சேதம் அடைந்துள்ளது. கொடிமரத்தில் ஏற்ப்பட்டுள்ள சேதத்ததை சரி செய்யும் பணியில் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.