பதிவு செய்த நாள்
04
அக்
2024
04:10
அனுப்பர்பாளையம்; திருப்பூர் அடுத்த திருமுருகன் பூண்டியில் முயங்கு வல்லியம்பிகை உடனமர் ஸ்ரீ திருமுருகநாத சுவாமி திருக்கோயில் உள்ளது. கோவிலில், கோவில் நிர்வாகம் சார்பில் உலக நன்மைக்காகவும், தொழில் வளம் பெருகவும், விவசாயம் செழிக்கவும், ஸ்ரீ சதசண்டி யாகம் நடைபெறுகிறது. யாகம் நேற்று வியாழக்கிழமை தொடங்கியது. வருகிற 12 ம் தேதி சனிக்கிழமை வரை நடைபெறுகிறது. யாகத்தையொட்டி, இன்று 4 ம் தேதி காலை 9:00 மணிக்கு வேத பாராயணம், தேவி மகாத்மிய பாராயணம் நடைபெற்றது. மாலை 4:00 மணி முதல், விக்னேஷ்வர பூஜை, வேதிகார்ச்சனை, தேவி மகாத்மிய பாராயண ஹோமம், பட்டு புடவை சவ்பாக்கிய திரவியங்களுடன் சதசண்டி யாகம் நடைபெற்றது. தொடர்ந்து, சாமிக்கு தீபாராதனையை தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. யாகத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.