Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ... புரட்டாசி  சனி, நவராத்திரி பண்டிகை; கோவை கோவில்களில் குவிந்த பக்தர்கள் புரட்டாசி சனி, நவராத்திரி பண்டிகை; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் தீர்த்தவாரி; கொட்டகை அமைக்க பூமி பூஜை
எழுத்தின் அளவு:
மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் தீர்த்தவாரி; கொட்டகை அமைக்க பூமி பூஜை

பதிவு செய்த நாள்

05 அக்
2024
10:10

மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் நகரின் நடுவே ஓடும் காவிரி ஆற்றில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களும் துலா உற்சவம் நடைபெறும். இந்த 30 நாட்களும் துலா கட்ட காவிரியில் கங்கை, யமுனை சரஸ்வதி உள்ளிட்ட புண்ணிய நதிகள் இங்கு வந்து காவிரியில் நீராடி தங்கள் பாவங்களை போக்கிக் கொண்டதாக ஐதீகம். இந்த ஐப்பசி மாதம் (துலா மாதம்) 30 நாட்களும் காவிரியில் புனித நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இந்நிலையில் ஐப்பசி 30 ஆம் தேதி நடைபெறும் கடைமுக தீர்த்தவாரி உற்சவத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் இந்த உற்சவத்திற்கு காவிரியின் இரு கரையிலிலும் ஐந்து கோயில்களில் இருந்து சுவாமி, அம்பாள், பஞ்சமூர்த்தி எழுந்தருளி தீர்த்தவாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும் காவிரி வடக்கு கரையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வதானேஸ்வரர், காசி விசுவநாதர் உள்ளிட்ட சுவாமிகள் எழுந்தருளும் இடத்திற்கு கொட்டகை இல்லாததால் மயிலாடுதுறை எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் தகர ஷெட்டு மற்றும் ஃபேவர் பிளாக் தரை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. நகராட்சி தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ ராஜகுமார் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி ஷெட் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். இதில் நகராட்சி வார்டு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், தியாகி வடிவேல் நகரில் அமைந்துள்ள சீரடி குபேர சாய்பாபா ஆலயத்தின் 4ம் ... மேலும்
 
temple news
கோவை; ஆனி மாதம் பிரதோஷ தினத்தை முன்னிட்டு கோவை கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
சேலம்; சேலம், கன்னங்குறிச்சியைச் சேர்ந்த சிற்பி, ஸ்தபதி ராஜா, 66; பஞ்சலோக சிலை மற்றும் பழமையான கோவில்களை ... மேலும்
 
temple news
மதுரை; மதுரை, விராட்டிபத்து முத்தாலம்மன் கோயிலை மக்கள் எதிர்ப்புக்கு இடையே போலீஸ் பாதுகாப்புடன் ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை; ஊத்துக்கோட்டை அருகே திரவுபதி அம்மன் கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில், 300க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar