மயிலம்; மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டில் உள்ள ரங்கநாயகி சமேத பள்ளிகொண்ட பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கபட்டது.