சிதம்பரம் தில்லை காளி கோவில் உண்டியலில் ரூ. 12.53 லட்சம் காணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09அக் 2024 10:10
சிதம்பரம்; சிதம்பரம் தில்லை காளி கோவிலில் நேற்று உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில், 12 லட்சத்து 53 ஆயிரத்து 603 ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். சிதம்பரம் தில்லை காளி கோவிலில் நேற்று பக்தர்கள் காணிக்கை உண்டியல்கள் திறந்து காணிக்கை எண்ணப்பட்டது. கடலூர் உதவி ஆணையர் சந்திரன் தலைமையில், செயல் அலுவலர் சிவக்குமார் (பொறுப்பு), சிதம்பரம் சரக ஆய்வாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணியில் 20க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். அதில், 12 லட்சத்து 53 ஆயிரத்து 603 ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். அத்துடன் 28 கிராம் தங்கம், 160 கிராம் வெள்ளி, மலேசியா, ரிங்கட் 1, 5 திராம் –2, 100 திராம் –1 ஆகிய வெளிநாட்டு பணம் இருந்தது.