பதிவு செய்த நாள்
09
அக்
2024
10:10
திருப்பூர்; நவராத்திரி விழாவை முன்னிட்டு, திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், திருப்பூர் வடக்கு ரோட்டரி ஆன்மிக குழு, ஆதீஸ்வர் டிரஸ்ட் மற்றும் பிரேமா கல்வி நிலையம் சார்பில், நவராத்திரி விழா களைகட்டியுள்ளது. தினமும் காலை, 11:00 மணிக்கு, மூலவர் விசாலாட்சி அம்மனுக்கு மகா அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. மாலையில், உற்சவருக்கு சிறப்பு அலங்கார பூஜையும், கொலு வழிபாடும் நடக்கிறது. அதனை தொடர்ந்து, பள்ளி குழந்தைகள் கலை நிகழ்ச்சி, ஆன்மிக சொற்பொழிவு, நிறைவாக பிரசாதம் என களைகட்டியுள்ளது. வீரராகவப்பெருமாள் கோவிலில், சாய்கிருஷ்ணா நுண் கலைக்கூட மாணவியர் தினமும் இரவு, 7:00 மணிக்கு நடன நிகழ்ச்சி நடத்துகின்றனர். l திருப்பூர் கரட்டாங்காடு குலால சமுதாய முன்னேற்ற சங்கத்தில், நவராத்திரி கொலு வழிபாடு சிறப்பாக நடந்து வருகிறது. குலால மகளிர் அணி சார்பில், தினமும் மாலை, 5:30 மணிக்கு கொலு வழிபாடும், மாலை, 6:00 மணிக்கு அம்மன் பாடல் பாராயணம் மற்றும் குழந்தைகள் கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.