திருப்பதி: திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் ஆறாம் நாளான இன்று (செப்.9ல்) மலையப்பசுவாமி அனுமன் வாகனத்தில் வலம்வந்து பக்தர்ளுக்கு அருள்பாலித்தார்.
திருமலையில் ஏழுமலையானுக்கு வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது.முக்கிய நிகழ்வான கருட சேவை நேற்று இரவு நடைபெற்றது. பிரம்மோற்சவ விழாவின் ஆறாம் நாளான இன்று (செப்.9) மலையப்பசுவாமி அனுமன் வாகனத்தில் வலம்வந்து பக்தர்ளுக்கு அருள்பாலித்தார். அனுமன் வாகனம் என்பதால் பக்தர்கள் பலர் அனுமன் வேடமிட்டு வந்தனர். சுவாமியை பாசுரம் பாடி மாடவீதிகளில் அழைத்துச் சென்றனர். பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, திருமலை முழுவதும் மலர்களாலும், மின்விளக்குகளாலும் அழகுற அலங்கரிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணி தங்க ரதம், இரவு 7 மணி யானை வாகன உலா நடக்கிறது. 10ம் தேதி காலை 8 மணி சூர்ய பிரபை வாகனம், இரவு 7 மணி சந்திர பிரபை வாகனம். 11ம் தேதி காலை 7 மணி தேரோட்டம், இரவு 7 மணி குதிரை வாகனம். 12ம் தேதி காலை 6 மணி சக்ர ஸ்நானம், இரவு 8:30 மணி கொடியிறக்கம் நடைபெற உள்ளது.