பதிவு செய்த நாள்
09
அக்
2024
11:10
திருப்புவனம்; திருப்புவனம் மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் பத்ரகாளியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை பணம் எண்ணும் பணி நேற்று காலை நடந்தது. பிரசித்தி பெற்ற மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் 9 நிரந்தர, 5 தற்காலிக, 1 கோசாலை உண்டியல்கள் உள்ளன. கோயிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியல்களில் அம்மனுக்கு காணிக்கையாக பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றை வழங்குவது வழக்கம்.நேற்று 15 உண்டியல்கள் திறக்கப்பட்டு இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்த பணம், நகை உள்ளிட்டவைகள் எண்ணப்பட்டன. உதவி ஆணையர்கள் கணபதிமுருகன் ( மடப்புரம் பத்ர காளியம்மன்), ஞானசேகரன் (ராமநாதபுரம்) தலைமையில் மதுரை அன்னபூரணி சேவா சங்கத்தினர், கோயில் ஊழியர்கள், அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். மொத்தம் 15 உண்டியல்களில் 37 லட்சத்து 64 ஆயிரத்து 820 ரூபாயும், 382 கிராம் தங்கமும், 510 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்தன. கண்காணிப்பு பணியில் ஆய்வர் அய்யனார், கண்காணிப்பாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் ஈடுபட்டிருந்தனர்.