உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09அக் 2024 01:10
உளுந்தூர்பேட்டை; உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ பெருமாள் கோவிலில் புரட்டாசி 3ம் புதன்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. உளுந்தூர்பேட்டை ஸ்ரீகனகவல்லி தாயார் சமேத ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவிலில் புரட்டாசி புதன் கிழமையை முன்னிட்டு கோ பூஜை நடந்தது. பின்னர் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடந்தது. பின்னர் தீபாராதனை வழிபாடு நடந்தது. அதனைத் தொடர்ந்து கருடாழ்வார் வாகனத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.