ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் உபகோயிலான உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. நவராத்திரி விழாவையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உபகோயிலான உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா நடக்கிறது. இரவு கோயில் முன்பு உலக நன்மைக்காக வேத மந்திரங்கள் முழங்க திருவிளக்கு பூஜை நடந்தது. இதனைத் தொடர்ந்து உஜ்ஜயினி மாகாளி அம்மனுக்கு அபிஷேகங்கள், மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.