பதிவு செய்த நாள்
09
அக்
2024
04:10
சிவகங்கை; நாட்டரசன்கோட்டை வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் புரட்டாசி பிரமோத்ஸவ விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது. சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் அக்., 4 ம் தேதி கொடியேற்றத்துடன் பிரமோத்ஸவ விழா துவங்கியது. தினமும் சீதேவி, பூதேவியருடன் வெங்கடாஜலபதி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர்.
6 ம் நாளான இன்று காலை சிறப்பு பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து காலை 11:00 மணி முதல் 12:00 மணிக்குள் ஸ்ரீதேவி, பூதேவி, வெங்கடாஜலபதி திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று இரவு 7:00 மணிக்கு யானை வாகனத்தில் திருவீதி உலா வந்து, தாயார் சன்னதியில் எழுந்தருளினார். அங்கு மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் 9 ம் நாளான அக்.,12 அன்று காலை 10:35 முதல் 11:25 க்குள் தேரோட்டம் நடைபெறும். அக்., 14 ல் ஊஞ்சல் உற்சவத்துடன் பிரமோத்ஸவ விழா நிறைவு பெறுகிறது. கோயில் கண்காணிப்பாளர் சரவண கணேசன், கவுரவ கண்காணிப்பாளர் கருப்பையா ஆகியோர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.