பதிவு செய்த நாள்
09
அக்
2024
05:10
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோவில் அருகில், துாப்புல் வேதாந்த தேசிகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் 756வது புரட்டாசி திருவோண நட்சத்திர வார்ஷீக மஹோத்ஸவம் கடந்த 3ம் தேதி துவங்கியது.
தொடர்ந்து 11 நாட்கள் நடக்கும் உற்வசத்தில் தினமும், காலையில் தங்க பல்லக்கில் வெவ்வேறு அலங்காரத்திலும், மாலையில், பல்வேறு வாகனத்திலும், எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் துாப்புல் வேதாந்த தேசிகர், முக்கிய வீதி வழியாக உலா வருகிறார். அதன்படி, ஏழாம் நாள் உற்சவமான இன்று காலை 6:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய வேதாந்த தேசிகர் முக்கிய வீதி வழியாக உலா வந்தார். மாலை ராமர் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், 10ம் நாள் உற்சவமான நாளை மறுநாள், விளக்கொளி பெருமாள் மங்களாசாஸனமும், தேவாதிராஜன் பெரிய தங்க பல்லக்கில் பேரருளாளன் மங்களாசாஸனத்திற்கு அஞ்சலி திருக்கோலத்தில் எழுந்தருள்கிறார். அக்., 13ம் தேதி காலை, கந்தப்பொடி வசந்தம், தீபப்ரகாசருக்கு விமான உற்சவத்துடன், 11 நாட்கள் நடக்கும் துாப்புல் வேதாந்த தேசிகரின் வார்ஷீக மஹோத்ஸவம் நிறைவு பெறுகிறது.