ஸ்ரீவில்லிபுத்துார் பத்திரகாளியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09அக் 2024 05:10
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் மம்சாபுரம் சிவந்திபட்டி பத்திரகாளியம்மன் கோவில் தேரோட்டம் திருவிழா இன்று சிறப்புடன் நடந்தது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 5:00 மணிக்கு திருத்தேருக்கு அம்மன் எழுந்தருளினார். அங்கு அம்மனுக்கு பூஜைகள் நடந்தது. பின் காலை 10:00 மணிக்கு பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் துவங்கியது. முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேர் மதியம் 1:45 மணிக்கு நிலையம் அடைந்தது. பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.