Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை: வீடு, ... நிறைகுளத்து அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா நிறைகுளத்து அய்யனார் கோயில் குதிரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தென் திருப்பதி திருவேங்கிட சுவாமி கோயிலில் பிரமோற்சவ தேரோட்டம்
எழுத்தின் அளவு:
தென் திருப்பதி திருவேங்கிட சுவாமி கோயிலில் பிரமோற்சவ தேரோட்டம்

பதிவு செய்த நாள்

11 அக்
2024
03:10

மேட்டுப்பாளையம் ; தென் திருப்பதி திருவேங்கிட சுவாமி ஆலையத்தில் நவராத்திரி  பிரமோற்சவத்தை ஒட்டி   திருத்தேரோட்டம்  நடைபெற்றது. கோவிந்தா கோஷம் முழங்க ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்தனர்.

கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாக கருதப்படும் தென்திருப்பதி திருவேங்கிட சுவாமி ஶ்ரீவாரி ஆலயத்தில்  ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் நவராத்திரி பிரமோற்சவ விழா கடந்த 3 ம் தேதி  துவங்கியது. இதன் பின்னர் தினசரி வேத மந்திரங்கள் முழங்க கோவில் வேத  விற்பன்னர்கள் சிறப்பு பூஜைகளும், யாகங்களும் நடைபெற்று வந்தது. இதனை தொடர்ந்து ஶ்ரீதேவி பூதேவியுடன் திருவேங்கிட சுவாமி அன்னப்பட்சி வாகனம், சிம்ம வாகனம், கருட வாகனம், கல்ப விருட்ச வாகனம் என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது. இந்நிலையில், நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம்   நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட தேரில் ஶ்ரீதேவி பூதேவி தாயாருடன்  மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதனை தொடர்ந்து மேள தாளத்துடன் திருத்தேரினை பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா கோஷங்கள் முழங்க திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர் கோவில் முன்பு இருந்து துவங்கி கோவிலின் நான்கு மாட வீதிகள் வழியாக திருத்தேர் பவனி வந்து மீண்டும் நிலையை அடைந்தது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரம்மாவை நோக்கி தவம் செய்த மகிஷன் என்னும் அசுரன், தனக்கு அழிவு நேர்ந்தால் ஒருபெண்ணால்  மட்டுமே நிகழ ... மேலும்
 
temple news
திருவாரூர்; திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்த கூத்தனூரில் மகா சரஸ்வதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை பிரம்மோற்சவ விழாவில் இன்று (செப்.,11) காலை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் கோவில், சக்தி கொலுவில் அம்பாள், காமாட்சி அம்மன் அலங்காரத்தில் நேற்று ... மேலும்
 
temple news
பாலக்காடு; கொடுந்திரப்புள்ளி அக்ரஹாரம் ஐயப்பன்-பெருமாள் கோவில்களில் துர்காஷ்டமி நவராத்திரி உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar