பதிவு செய்த நாள்
15
அக்
2024
04:10
சென்னை; தி.நகர்., பத்மாவதி தாயார் கோவிலில் நடந்து வரும் பவித்ரோத்ஸவத்தை முன்னிட்டு இன்று மகா கும்ப ஸ்தாபனம், பவித்ர பிரதிஷ்டை நடந்தது.
சென்னை, தி.நகர், ஜி.என்.செட்டி சாலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பத்மாவதி தாயார் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஓராண்டாக நடந்த நித்ய, நைமித்திக், காம்ய உற்சவ பூஜைகளில் மந்திர, தந்திர, திரவிய அனுஷ்டானங்களில் நிகழ்ந்த தோஷங்கள் அகலவும், அதற்கான பிராயச்சித்தமாக பாஞ்சராத்ர ஆகம விதி முறைப்படி பவிரோத்ஸவம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான பவித்ரோத்ஸவம் நேற்று விக்வஷேனா ஆராதனை, அங்குரார்ப்பணத்துடன் துவங்கியது. இன்று காலை மகா கும்ப ஸ்தாபனம், பவித்த பிரதிஷ்டை நடந்தது. மாலை சதஸ்தானார்ச்சனம், பூர்ணாஹுதி, தீர்த்தப் பிரசாதம் வினியோகம் நடந்தது. நாளை பவித்ர சமர்ப்பணம் நடக்கிறது. நாளை மறுநாள் மகா பூர்ணாஹுதி, திருமஞ்சனம், சக்ரஸ்நானம், கும்ப பிரோக்ஷணம் நடக்கிறது.