தாண்டிக்குடி ராமர் கோயிலில் புரட்டாசி திருவிழா; குதிரை வாகனத்தில் சுவாமி வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16அக் 2024 10:10
தாண்டிக்குடி, தாண்டிக்குடி ராமர் கோயிலில் புரட்டாசி திருவிழா மூன்று நாள் நடந்தது. விழாவில் சவுமியநாராயணப்பெருமாள் கருடன், சர்ப்பம், குதிரை வாகனத்தில் நகர் வலம் வருதல் நடந்தது. தொடர்ந்து மஞ்சள் நீராட்டு நடந்தது. முன்னதாக அன்னதானம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.