வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16அக் 2024 04:10
வத்திராயிருப்பு; வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்ட திருவிழா இன்று கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
வத்திராயிருப்பு தாலுகாவில் மிகவும் பிரசித்தி பெற்ற முத்தாலம்மன் கோயில் தேரோட்ட திருவிழா கடந்த அக்.1ல் வடக்கு வாசல் செல்வி அம்மன், முத்தாலம்மன் மது பொங்கல் சாட்டுதல் நிகழ்வுடன் துவங்கியது. தினமும் மாலையில் ஆன்மீக கலை நிகழ்ச்சிகள் நடந்தது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று இரவு அம்மன் தேருக்கு எழுந்தருளளுடன் துவங்கி, இன்று மதியம் முடிந்தது. இன்று அதிகாலை 3:00 மணிக்கு திருத்தேரில் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தேரோட்டம் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று தேர் மதியம் 3:00 மணிக்கு நிலையம் சேர்ந்தது. பக்தர்கள் அம்மனை மேளதாளம் முழங்க ஊர்வவமாக எடுத்துச் சென்று கோயிலில் எழுந்தருள செய்தனர். அங்கு உருவச் சிலைகளை காணிக்கை செலுத்தி, மஞ்சள் நீர் ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். மாலையில் மஞ்சள் நீராட்டும், இரவில் மாவிளக்கு ஊரலமும், பின்னர் அம்மன் பிரியாவிடை நிகழ்ச்சியும் நடக்கிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. ராஜா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.