Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பவுர்ணமி கிரிவலம் செல்ல ... ஐப்பசி மாத பூஜைக்காக  சபரிமலை நடை திறப்பு; நெய் அபிஷேகம் துவக்கம் ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை நடை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சை பெரியகோவில் பவுர்ணமி வலம்; தென்கயிலாய வலம் என பெயர் சூட்டி பரவசம்
எழுத்தின் அளவு:
தஞ்சை பெரியகோவில் பவுர்ணமி வலம்; தென்கயிலாய வலம் என பெயர் சூட்டி பரவசம்

பதிவு செய்த நாள்

17 அக்
2024
07:10

தஞ்சாவூர்; தஞ்சாவூர், பெரியகோவிலில் மாததோறும் பவுர்ணமி நாளில் வலம் நடந்தது. கடந்த சுமார் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக கிரிவலம் தடைப்பட்டது. இந்நிலையில் பக்தர்களின் கோரிக்கையை தொடர்ந்து அரண்மனை தேவஸ்தானம், இந்திய தொல்லியல்துறை அனுமதியுடனும், மாநகராட்சி சார்பில் பல்வேறு ஏற்பாடுகளுடன் கடந்த செப்டம்பர் மாதம் கிரிவலம் துவங்கப்பட்டது. 


இதையடுத்து, இரண்டாவது பவுர்ணமி வலத்திற்கு,  திரு தென்கயிலாய வலம் என பெயர் சூட்டப்பட்டது. இந்த திரு தென்கயிலாய வலம் நேற்று மாலை 6: 00 மணிக்கு துவங்கி இன்று(17ம் தேதி) காலை 6:00 மணி வரை நடந்தது. இதில், சிவவாத்தியங்கள் இசைக்க, யானையுடன்  ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு கோவில் வலபாதையை சுற்றி வந்தனர்.  இதற்காக மாநகராட்சி சார்பில், பக்தர்கள் வலம் வரும் பாதையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மருத்துவ வசதி, மின்விளக்கு வசதி, அமருவதற்கு இருக்கைகள் என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு இருந்தன. மேலும், இலவச மருத்துவக் குழுவும், ஆம்புலன்ஸ் வசதியும் தயார் நிலையில் இருந்தது. தொடர்ந்து நேற்று மாலை தென்கயிலாய வலத்தில், மாநகராட்சி மேயர் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம், அரண்மனை தேஸ்வதான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, சதயவிழாக்குழு தலைவர் செல்வம் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; மழை ஓய்ந்து, வெயில் அடிக்க தொடங்கியதால் பவுர்ணமி கிரிவலம் செல்ல, திருவண்ணாமலையில் ... மேலும்
 
temple news
சபரிமலை; ஐப்பசி மாதப்பிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறந்தது. கார்த்திகை ஒன்றாம் தேதி ... மேலும்
 
temple news
மேல்மருவத்துார்; மேல்மருவத்துாரில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், இன்று பங்காரு அடிகளார் சிலை ... மேலும்
 
temple news
சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவிலில், ருத்ர மகா அபிஷேகத்தில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ... மேலும்
 
temple news
விக்ரமங்கலம்; விக்கிரமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழா அக்.15ல் துவங்கியது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar