சேற்று மாரியம்மன் கோவில் பூச்சாட்டு விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17அக் 2024 07:10
அவிநாசி; தெக்கலுாரில் உள்ள ஸ்ரீசேற்று மாரியம்மன் கோவில் பூச்சாட்டு விழா கடந்த, 8ம் தேதி துவங்கியது. நேற்று தெக்கலுார், ஏரிப்பாளையம், வெள்ளாண்டிபாளையம், ஆலம்பாளையம் ஆகிய கிராமங்களில் இருந்து, பச்சரிசி மாவிளக்கு அம்மனுக்கு படைக்க நுாற்றுக்கணக்கான பெண்கள் ஊர்வலமாக சென்றனர். சிறப்பு பூஜைகளுக்கு பின், கம்பம் கங்கையில் விடப்பட்டு, பூச்சாட்டு விழா நிறைவுபெற்றது. பூச்சாட்டு விழாவை முன்னிட்டு தெக்கலுார் கொங்கு இளைஞர்கள், விழா குழுவினர் மற்றும் எம்.ஆர்., டெக்ஸ் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.