பதிவு செய்த நாள்
17
அக்
2024
07:10
செஞ்சி; செஞ்சி காசி விஸ்வநாதர் கோவிலை 2 கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்க திருப்பணிக்குழு கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர். செஞ்சி சிறுகடம்பூர் காசிவிஸ்வநாதர் கோவில் திருப்பணிக்குழுவை தேர்வு செய்வதற்கான பொது மக்கள் ஆலோசனை கூட்டம் கோவில் வளாகத்தில் நடந்தது. இதில் ராஜா தேசிங்கு கல்வி அறக்கட்டளை தலைவர் பாபு திருப்பணிக்குழு தலைவராகவும், செயலாளராக சங்கர், பொருளாளராக அய்யப்பன், துணை தலைவர்களாக பாலகிருஷ்ணன், துரைக்கண்ணு, துணை செயலாளர்களாக கிருஷ்ணமூர்த்தி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர். இதன் பிறகு நடந்த திருப்பணிக்குழு நிர்வாகிகள் கூட்டத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பில் கோவிலின் பழமை மாறாமல் திருப்பணிகள் செய்வது என்றும், திருப்பணியை டிசம்பர் 5ம் தேதி துவங்குவது என்றும் முடிவு செய்தனர். திருப்பணிக்குழு நிர்வாகிகள் ராஜன், ராஜா, சிவராமன், சங்கர், சுகுமார், பழனி, கண்ணன், பாண்டியன், சண்முகம், செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.