ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் விஷு புண்யகால புறப்பாடு; தங்க குடத்தில் புனித நீர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17அக் 2024 09:10
ஸ்ரீரங்கம்; பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். இங்கு இன்று விஷு புண்யகால புறப்பாடு நடைபெற்றது. காவேரியில் இருந்து தங்க குடத்தில் புனித நீர் கொண்டு வரப்பட்டு நம்பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஐப்பசி மாதம் முழுவதும் தென் திருக்காவிரியில் இருந்து தங்க குடத்தில் தீர்த்தம் கொண்டு வரப்படும். மற்ற 11 மாதங்கள் கொள்ளிடத்தில் இருந்து வெள்ளி குடத்தில் தீர்த்தம் கொண்டு வரப்படும். ஐப்பசி மாதம் முழுவதும் சாளக்கிராம மாலை சாற்றி கொண்டு பெரிய பெருமாள் சேவை சாதிப்பார். மேலும் ஐப்பசி மாதம் முழுவதும் திருவாரதனத்திற்கு தங்க வட்டில்கள் உபயோக படுத்தபடும். விழாவில் துலா மாதம் ஆரம்பம் முதல் மாதம் முழுதும் காவேரியில் இருந்து தங்க குடத்தில் புனித நீர் கொண்டு வருப்பட்டு நம்பெருமாள் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.